Thursday, September 20, 2012

ஒரு நொடி







நிதானமாக நடந்தும் 
தடுமாறி விழுந்தேன் 
உன் பார்வையில் !!!

Tuesday, September 18, 2012

லஞ்சம்


மனிதனுக்கு உதவ 
கடவுளே காணிக்கை கேட்க்கும்போது 
நான் கேட்க்ககூடாத..?
இப்படி தோன்றி இருக்குமோ லஞ்சம் வாங்குவது ???

Sunday, September 16, 2012

கடற்கரை


   அலை மோதும் கடற்கரை...
அலை பாயும் மன நிலை..
        தொட்டுச்  சென்ற சிறு மழை ...
     எட்டிப்பார்த்த நினைவலை ...
   கட்டிப் போட்ட வானிலை....
           சட்டென்று முடிந்தது பாதியில்...
   இந்த கவிதையைப்போல !!!

Saturday, September 15, 2012

கண்ணீர்



விழிகளின் வழிகளில்.. 

விழுகின்ற துளிகளின்..
வலியினை துடைக்கிற..
வழிகளை அறியவே..
விழிக்கிறேன் எதிரிலே !!! 

கனவு தேவதை









நிலவும் ஒளி தேடும்..
சூரியனும் சூடாகும்..
குளிருக்கும் நடுக்கம் வரும்..
நீரும் கரைந்து விடும்..
வெட்கமும்  தலை குனியும்..
நீ அருகில் வந்தால் ...!

கடலும் அவளும்



எல்லையில்லா கடல்வெளி-
  முடிந்தது அவள் காலடியில் ...

வருடவரும் சிறு அலைகள்-
                         விட்டுச்சென்றது அவள் நினைவுகளை ...

            உப்புத் தண்ணீரை தொடுமுன்னே-    
முழ்கிவிட்டேன் அவளில்  !!!!

தோழி



காதலிக்கும் ஆசை கரைந்து போனது 
தோற்ற என் தோழியின் கண்ணீரில் !!!